Navigation


RSS : Articles / Comments


இந்திய கிறிக்கெற் வீரர்மீது சிங்களவர் இரும்புக் கம்பியை வீசியெந்தார்

11:54 AM, Posted by sathiri, 16 Comments



சிறீலங்காவிற்கும் இந்தியாவிற்கும் நடந்த ஒருநாள் கிறிகற் போட்டியில் இந்திய அணிவென்றதையடுத்த இந்திய வீரர் சர்மா மீது ஒரு சிங்கள இரசிகர் இரும்புக் கம்பியை வீசியெறிந்தார். இதனால் விழையாட்டு சிறிது நேரம் தடைப்பட்டு மீண்டும் தொடர்ந்தது செய்தி ஆதாரம் டெய்லி மிரர்.

சிங்களம் என்னத்தாலை எறிந்தாலும் இந்தியாவிற்கு ரோசமே வராதாம் அவங்க ரெம்ப நல்லவங்க

கவிதையொன்று எழுதுங்கள் கலைஞரே

3:25 PM, Posted by sathiri, 2 Comments

கலைஞரே
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்
கவிதையொன்று எழுதுங்கள்
கறுப்புக்கண்ணடிடியுடன்
கரகரத்த குரலால்
கலைஞர் தொலைக்காட்சியில்
கட்டுமரமாவேன் என்றதைப்போல
கவிதையொன்று எழுதுங்கள்

முத்துக்குளிக்கும் மண்ணிலிருந்து
முத்துக்குமாரெனும்
முத்தான உடன்பிறப்பொன்று
முடியாட்சி முற்றத்தில்
முடித்துக்கொண்ட
மூச்சுக்காற்றில்
மு. க. குடும்பத்திற்கு
மூலதனம் தேடாமல்
முடிந்தால் எழுதுங்கள்


பிரபாகரனை பிடிக்க முல்லைத்தீவை நோக்கி 3000 இந்திய இராணும்

1:59 PM, Posted by sathiri, 4 Comments

3,000 இந்திய இராணுவத் துருப்புக்கள் இன்று மாலை இலங்கை நேரப்படி 4 மணிக்கு இலங்கையில் இறங்கியதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாய் முல்லைத் தீவை நோக்கி புலிகளுடன் போரிட செல்வதாய் இந்திய தலைவர்கள் கூறுகின்றனர்.

பாரதிய பார்வேட் பிளாக் கட்சியின் தலைவர் திரு. நகைமுகன் தமிழ்ச் செய்தி மையத்துடன் தொடர்பு கொண்டு அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொண்ட பொழுது, இராச பக்சே அறிவித்துள்ள 48 மணி நேர போர்நிறுத்தம் என்பது இந்தியாவிலிருந்து 3,000

இராணுவத்தினர் முல்லைத் தீவை நோக்கி பயணிப்பதாயும், அவர்கள் அனைவரும் முல்லைத் தீவிலுள்ள புலிகளுடன் நேரிடையாக போரிட செல்வதாயும் கூறினார். மேலும் அவர், இந்திய வெளிவிவகாரதுறை அமைச்சர் நமது தமிழக முதல்வருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில்

சொல்லப்படுவது உண்மையல்ல என்றும், ஐ.நா.வின் பொதுச்செயலாளர் திரு. பான் கீ மூன் டெல்லி வருவதற்கு முன்பே இலங்கைக்கு நமது படைகள் அனுப்பி வைத்துள்ளதாயும் கூறுகிறார்.

அவர் மேலும், அன்மையில் புலிகளால் தகர்க்கப்பட்ட கல்மடுஅணையின் போது ஏற்பட்ட இழப்பில் இந்திய படைகள் மிக மோசமாய் இறப்புகள் சந்;தித்ததாயும், அதை ஈடுகட்டவே, இன்றைக்கு 3,000 இந்தியப் படைகள் இலங்கை சென்றுள்ளதாய், இதற்கு தம்மிடம் ஆதரமுள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை கூறினார்.

இந்தத் தகவல் உறுதி செய்யும்;விதமாய், தமிழர் களத்தின் அமைப்பாளர் திரு. அரிமாவளவன் திருச்சியிலிருந்து நம்மை தொடர்பெடுத்து, 3,000 இந்திய துருப்புக்கள் இன்று மாலை இலங்கையில் இறங்கியுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் முல்லைத் தீவை நோக்கி போரிட செல்வதாயும் அதிர்ச்சி தகவலை நமக்கு சொன்னார்கள்.

புலிகளுக்கெதிரான போராய் அறிவித்த இலங்கை அரசு, ஒவ்வொரு நாளும், அங்குள்ள தமிழர்களை கொன்று வருவதும், பொது மக்களுக்கு உண்ண உணவோ, காயமடைந்தவர்களுக்கு மருந்துகளோ இல்லாத நிலையில், 3,000 இந்திய இராணுவத்தினர் அங்கு செல்வது, அங்கு அவதிப்படும் தமிழ் மக்களை கேள்விக்குள்ளாக்கும். இதை உடனடியாய் இங்கிருக்கும், நமது தமிழ் தலைவர்கள் தடுத்து நிறுத்துவது கடமையாகிறது.


-தமிழ்ச் செய்தி மையம்
http://www.tamilseythi.com/tamilnaadu/3-00...2009-01-30.html

தமிழகஉறவுகளே தயவுசெய்து தீக்குளிக்காதீர்கள்.

9:07 AM, Posted by sathiri, 4 Comments

ஈழத்தமிழ் உறவுகளிற்காக அன்றொரு அப்துல் ராவூப் இன்றொரு முத்துக்குமார். இனிய உறவுகளே இனியும் வேண்டாம். அகிம்சையை தேசம் என்கிற இந்தியாவின் போர்வை இன்னொருதரம் கிழிந்து தொங்குகின்றது காந்தி தேசம் என்று கதர்வேட்டிகள் காது கிழியக்கத்திக் கொண்டே காந்தி தன் கைகளாலேயே நெய்து உடுத்தியிருந்த அவரது வேட்டியை உருவி காற்றில் பறக்கவிட்டு பலவருடங்களாகி விட்டது. அன்று ஈழத்தில் அன்னை பூபதி பின்னர் திலீபன் தமிகத்தில் அப்துல் ராவூப் அதற்கிடையில் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் சாலை மறிப்புக்கள். பணிப்புறக்கணிப்புக்கள்.கடையடைப்புக்கள்.இடையிடையே அரசியல் வாதிகளினது அனைத்துக் கட்சி என்றும் தனிக்கட்சி என்றும் சேர்ந்தும் சேராமலும் அறிக்கைகளும். ஆர்ப்பாட்டங்களும்.திருமாவளவனின் உண்ணாவிதரம்.சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிதரம். இறுதியாய் முத்துக்குமார் என்கிற உறவின் உயிர்த்தியாகம். இத்தனையும் அகிம்சை வழியிலான போராட்டங்களே.இவை எவற்றையுமே இந்திய மத்திய தொடர்ந்தும் மத்திய அரசு உதாசீனம் செய்து வருவதால் இதற்கு மேலும் அகிம்சை ரீதியாக போராடுவதால் ஏதாவது பிரயோசனம் கிடைக்குமென்று நினைக்கிறீர்களா?? இனியும் தமிழன் சொல் சபை ஏறுமா??தமிழீழம் மலர்ந்தால் தமிழகமும் பிரிந்து போய்விடும் என்று இத்தனைகாலமும் பூச்சாண்டி காட்டியே ஒரு இனத்தின் விடுதலைப்போரை அடக்கி வந்த இந்திய அரசு. மெல்ல மெல்ல தானாகவே தன் தலையில் மண்ணள்ளிப் போட்டுகொள்ள முடிவு செய்துள்ளது. இனி தமிழ் நாட்டுத் தமிழன் என்ன ஆயுதத்தை கையில் எடுக்கவேண்டுமென்பதை இந்திய அரசே முடிவெடுக்கட்டும்

கண்கள் பனித்தது இதயம் பிளந்தது இன்னும் கொஞ்சம் பொறுங்கள்

8:01 AM, Posted by sathiri, 2 Comments



முத்துத்தமிழன் முத்துக்குமாரிற்கு அஞ்சலிகள்

பாகிஸ்தான் தூதரகத்திற்கு முன்னால் திரண்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள்

12:35 PM, Posted by sathiri, 2 Comments




இன்று பரிசின் முக்கிய பகுதியான எத்தவால் பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற கண்ட ஒன்றுகூடலில் பெரும் எழுச்சியுடன் கலந்துகொண்டனர். சுமார் பத்தாயிரம் வரையான மக்கள் கலந்துகொண்டு சிறிலங்கா அரசிற்கு பாகிஸ்தான் வழங்கிவரும் ஆயுத உதவிகளுக்கும் ஆதரவுகளுக்கும் எதிராக தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமான இந்தக் கண்டன ஒன்றுகூலில் ஒதுக்கப்பட்ட இடத்திற்கும் அதிகமான இடத்தில் மக்கள் குவிந்திருந்தனர்.
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவப்பொம்மையுடன் கூடியிருந்த மக்கள் சிறிலங்கா அரசின் தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினார்கள்.

இறுதியாக பாகிஸ்தான் தூதரகத்திடம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட தூதரகத்தின் முக்கிய அதிகாரி இது தொடர்பாக தமது நாட்டு அரசுக்கு தெரியப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

8:55 AM, Posted by sathiri, No Comment


வன்னியில் ஒரு வைத்தியசாலை வாருங்கள் பாருங்கள்

1:19 PM, Posted by sathiri, One Comment




ஜயா கருணாநிதி இந்தப்பொறுமை போதுமா??

3:57 AM, Posted by sathiri, No Comment

3:44 AM, Posted by sathiri, No Comment

இலங்கை இராணுவத்திற்கு தண்ணீரில் கண்டமாம்

3:00 PM, Posted by sathiri, 3 Comments

இதோ நெருங்கி விட்டோம்.. 50000 ஆயிரம் படையினர் சுற்றி வழைப்பு ....பதுங்கு குழியை கைப்பற்றி விட்டோம். இன்னமும் சிலரே உள்ளனர் அவர்கள் கடலில்தான் கு(ளி)திக்கவேண்டும்... 9நாடுகளின் நேரடி ஆலோசனை இராணுவ உதவிகள் மற்றும் மறைமுகமாக முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவு .. அதைவிட மிகப்பெரிய பக்கத்து நாடு முடிந்தளவு குனிந்து குனிந்து கொடுத்துக்கொண்டிருந்தது. என்ன செய்ய... பாவங்கள் தண்ணியிலை கண்டமாம். முதலிலையே ஒரு சாத்திரியை பார்த்து சாத்திரம் கேட்டிருக்கலாம்.

ராஜீவ் காந்திக்கு செருப்பு திடுக்கிடும் திருப்பம் தினமலரின் டக்காலக்கடி

11:42 PM, Posted by sathiri, 9 Comments


தினமலர் நிருபர் ராமசாமி, அவரது சகோதரர் ராஜா


புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பமாக தினமலர் நாளிதழ் நிருபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள ராஜீவ் சிலையில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட இலங்கை அதிபரின் உருவ பொம்மையை சிலர் கடந்த 19ம் தேதி கட்டிவிட்டு சென்றுவிட்டனர். இதை அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப்படைந்தனர். ராஜீவ் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ராஜீவ் சிலை அவமதிப்பு வழக்கில் புதுவையை அடுத்த குருவிநத்தத்தை சேர்ந்த ராமசாமி(25) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் தினமலர் பத்திரிகையின் பாகூர் நிருபர். அவரிடம் நடந்த விசாரணைக்கு பின்னர் ராஜா(29) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து சீனியர் எஸ்.பி. அகர்வால் கூறியதாவது:

ராஜீவ் சிலை அவமதிப்பு தொடர்பாக நடத்திய தீவிர விசாரணையில் செல்போன் எண் உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். 19ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு ராஜீவ் சிலை அருகில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்ணை தொடர்பு கொண்டபோது பாகூர் குருவிநத்தத்தை சேர்ந்த ராமசாமி(25) என்பது தெரியவந்தது. விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணாக இவர் கூறினார். தீவிர விசாரணையில் சிலை அவமதிப்பு செய்ததை ஒப்புக்கொண்டார். ராமசாமியின் சித்தப்பா மகன் ராஜா(29) என்பவர் உதவியாக உடன் இருந்து இருக்கிறார். பைக்கில் உருவ பொம்மையை கொண்டு வந்து இருக்கின்றனர். உருவ பொம்மையை ராஜா தூக்கிவிட ராமசாமி, சிலையில் கட்டியிருக்கிறார்.

இவ்வாறு அகர்வால் கூறினார்.

கைதான தினமலர் நிருபர் ராமசாமி, ராஜா ஆகியோரை புதுச்சேரி குற்றவியல் நீதிபதி சுதா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் புதுவையில் நேற்று அளித்த பேட்டி:

ராஜீவ் சிலை அவமதிப்பு நிகழ்வு தொடர்பாக குற்றவாளி யார் என அடையாளம் காணும் முன் விடுதலை சிறுத்தைகளை அத்துடன் இணைத்து தினமலர் நாளிதழ் அவதூறு பரப்பியது. இப்போது கைதாகி உள்ள ராமசாமி, ராஜா ஆகிய இருவரும் தலித் அல்லாதவர்கள் என்பதும், அதில் ராமசாமி என்பவர் தினமலர் நிருபர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதில் நிருபர் மட்டும் பொறுப்பாக இருக்க மாட்டார். தினமலர் ஆசிரியரும், வெளியீட்டாளரும் இதன் பின்னணியில் இருப்பதாக ஐயப்படுகிறோம். இதை தீவிரமாக விசாரிக்கவேண்டும். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் இடையே கடுமையான முரண்பாட்டை உருவாக்கி, புதுவை - தமிழகத்தில் மிக மோசமான வன்முறையை தூண்ட வேண்டும் என்பதும், அதன்மூலம் தமிழக அரசுக்கு நெருக்கடி தரவேண்டும் என்பதும் அவர்களது உள்நோக்கமாக உள்ளது.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

http://www.dinakaran.com

பாரீசில் மனிதச்சங்கிலிப் போராட்டம்

1:47 PM, Posted by sathiri, One Comment







,d;W khiy ghup]; tu;j;jf epWtdq;fspd; Mjutpy; xOq;fikf;fg;gl;bUe;j kdpj rq;fpypg; Nghuhl;lj;jpy; 4000w;Fk; Nkw;gl;l kf;fs; mzpjpuz;L jahfj;jpy; my;yYWk; jk; cwTfSf;F jkJ Nerf;fuj;ij ePl;bAs;sdu;.

khiy 17.00 kzpf;F Muk;gkhd ,t; kdpj rq;fpyg; Nghuhl;lk; khiy 18.30 kzptiu ,lk;ngw;wJ.

jkpo; tu;j;jf epiyaq;fs; mjpfk; cs;s yhr;rg;gypd; gpujhd tPjpahd Nghu; T+u;f; nre;jdp tPjpapd; ,U kUq;fpYk; mzpjpuz;L epd;wdu;. Fspuhd fhy epiy epytpa NghJk; Mz;fs;> ngz;fs;> khztu; vd midtUk; xd;Wjpuz;L mzptFj;J epd;W

vq;fs; jiytu; gpughfud;

vq;fs; Njrk; jkpoPok;

nfNrhNt kf;fs; Nghd;Nw jkpoUk;

Nghd;w nfhl;nlhypfis xypj;jdu;.

rfy tu;j;jf epWtdq;fSk; khiy 17.00 kzp njhlf;fk; 18.00 kzptiu jkJ tu;j;jf epiyaq;fis %btpl;L ,e;jg; Nghuhl;lj;jpy; ifNfhu;j;jpUe;jJ ,q;F Fwpg;gplj;jf;fJ.

வன்னியிலிருந்து ஒரு செய்தி. உலகத் தமிழினமே கலங்கவேண்டாம்

8:59 AM, Posted by sathiri, 8 Comments

தங்கபாலு வாழ்க

1:59 PM, Posted by sathiri, No Comment

புகைப்பிடித்தால்??

2:06 PM, Posted by sathiri, No Comment



100 வயது வாழலாம்

தமிழிச்சிகள்

9:22 AM, Posted by sathiri, No Comment

தங்கள் உடல்களையே பானைகளாக்கி பொங்கி வழிகின்ற உதிரம் மூலம் கதிரவனுக்கு வணக்கம் செலுத்தும் ஈழத்துமக்கள்!

1:54 PM, Posted by sathiri, 2 Comments










புலிகளின் சித்திரவதை முகாமிலிருந்து தப்பியதாக ரயாகரன் விடும் கரடி

3:41 AM, Posted by sathiri, 35 Comments

.இதுவரைகாலமும் இவரது எழுத்துக்களை மட்டுமே படித்து இவரை பற்றிய ஒரு கற்பனையை வளர்த்து வைத்திருப்பவர்களிற்கும் இவர்யார் ஏன் புலிகள் கைது செய்தார்கள்.என்ன நடந்தது என்கிற உண்மையையும் எழுதிவிடுகிறேன்.ஈழத்தில் 1983 கலவரத்தின் பின்னர் யாழ் குடாவில் ஊருக்கொரு விடுதலை இயக்கங்கள் தோன்றியது எல்லோருமே அறிவார்கள்.

இரண்டு மூன்று இளைஞர்கள் சேர்ந்து கையில் ஏதாவது ஒரு ஆயுதமோ கொஞ்ச வெடி மருந்தோ கிடைத்துவிட்டால் போதும் தமிழீழம் அல்லது ஈழம் என்று பெயர் வருகிற மாதிரி ஒரு பெயரையும் தெரிவுசெய்து ஒரு இயக்கம் தொடங்கி விடுவார்கள்.இப்படித்தான் நெல்லியடியை சேர்ந்த விஸ்வானந்ததேவன் என்பவரும் இந்த ரயாகரன் மற்றும் வேறு சிலரையும் இணைத்து மார்க்சிய கொள்கைகளுடன் ஒரு இயக்கத்தை தொடங்கினார்.இவரது இயக்கத்தின் பெயர் தமிழ் தேசிய விடுதலை முன்னணி(N.L.F.T). இந்த இயக்கத்தை தொடங்கிய சில காலத்திலேயே விஸ்வானந்ததேவன் காணாமல் போய்விட்டார்.

பின்னர் இவர் இந்தியா செல்கிறபோது கடலில் இலங்கை கடற்படை சுட்டுஇறந்ததாகவும் இவர்களது இயக்கத்தினுள் ஏற்பட்ட உட்பூசலால் ரயாகரனே இவர் இந்தியா செல்கிற விடயத்தை இலங்கை இராணுவத்திற்கு வழங்கியதாகவும் பேச்சு அடிபட்டது.

ஆனால் இதுவரை என்ன நடந்தது என்கிற உண்மை சரிவர தெரியா விட்டாலும் விஸ்வானந்த தேவன் உயிருடன் இல்லை என்பது மட்டும் உண்மை. பின்னர் இந்த இயக்க தலைமைக்காக ராயாகரனிற்கும் மற்றவர்களிற்கும் நடந்த பிரச்சனைகளில் பலர் அதைவிட்டு வெளியேறி போய்விட ராயாகரனும் ஒரு சிலருமே மிஞ்சினார்கள்.பின்னர் 86 களில் யாழ் குடா புலிகளின் கட்டுபாட்டினுள் வந்த பின்னர் அப்போது மிஞ்சியிருந்த இயக்கங்களும் தடை செய்யப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்கள் களையப்பட்டு அந்த இயக்கங்களால் கொள்ளையடிக்கபட்டிருந்த பொருட்கள் கடத்த பட்ட வானங்கள் என்பனவும் மீட்கபட்டது.

அப்படி ஆயுதங்கள் களையபட்டபோது சிலர் ஆயுதங்களுடன் தலைமறைவாகியிருந்தனர் அவர்கள் அந்த ஆயுதங்களை பாவித்து அவ்வப்போது பல குற்ற செயல்களிலும் ஈடுபட்தால் புலிகள் அப்படியானவர்களை தேடி கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

86ம் ஆண்டளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய கொள்ளை மற்றும் யாழ் கற்றன் நசினல் வங்கிகொள்ளை என்பனவற்றை இந்த இயக்கமே செய்தது அதில் ரயா கரனும் பங்கேற்றிருந்தார்.அப்படித்தான் ராயாகரனும் அவர் சார்ந்திருந்த இயக்கத்தின் ஆயுதங்களை ஒப்படைக்காமல் மறைத்து வைத்திருந்ததாலும் மற்றும் அந்த இயக்கத்தினால் நடாத்தப்பட்ட சில கொள்ளைகளை பற்றியும் புலிகளால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு ஆயுதங்கள் மீட்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.விடுதலையான இவர் இப்பொழுது செய்வது போலவே அன்றும் அய்யோ புலிகள் கொல்ல போகிறார்கள்.புலிகளால் தனது உயிரிற்கு ஆபத்து எனவே புலிகளிடமிருந்து தனது உயிரிற்கு உத்தரவாதம் வாங்கி தரும்படியும் யாழ் பல்கலைகழக ஆசிரியர்களிற்கும் மற்றும் மாணவர் அமைப்பிற்கும் தொடர்ந்து கடிதமெழுதிகொண்டிருந்தார்.

ரயாகரன் பலகலைகழக மாணவனாயிருந்த காரணத்தினால் யாழ் பல்கலைகழக சமூகம் புலிகளிடம் ரயாகரன் சார்பாக பேசி ரயாகரனிற்கு தங்களால் எவ்வித ஆபத்தும் இல்லையென உறுதிமொழி வழங்க கோரினார்கள்.
புலிகளும் அதன்படியே 1987ம் ஆண்டு யூலை மாத ஆரம்பத்தில் (திகதி எனக்குசரியாக ஞாபகத்தில் இல்லை) யாழ் பல்கலை கழக கைலாசபதி அரங்கில் அங்கு கூடியிருந்த ஆசிரிய மாணவர்களின் முன்னால் தாங்கள் சில விசாரணைகளிற்காகவே அவரை கைது செய்ததாகவும் ஆனால் ரயாகரனிற்கு தங்களால் இனிமேல் எவ்வித ஆபத்தும் இல்லைபகிரங்கமாகவே உறுதியளித்தனர். அதன் பின்னர் அந்த மேடையில் தோன்றிய ரயாகரன் புலிகள் தன்னை அடித்து சித்திரவதை செய்தனர் என்று புலிகளை பற்றி திட்டி தீர்த்து விட்டு எவ்வித அச்சுறுத்தலும் இன்றி அங்கிருந்து வெளியேறி பின்னர் யாழிலும் சுதந்திரமாகவேதான் திரிந்தார்.இரயாகரனை புலிகள் கைது செய்ய நினைத்திருந்தால் அவர் மேடையை விட்டு இறங்கியதும் அல்லது வெளியிலேயோ கைது செய்திருக்கமுடியும்.காரணம் பல்கலைகழகத்திற்கு மிக அருகிலேயே புலிகளின்இரண்டு முகாமும் இவரது வீட்டிற்கு அருகில் ஒரு முகாமும் இருந்தது.

அடுத்ததாக பிரான்சில்பொதுத் தேர்தல்களையடுத்து நடந்த கலவரங்களின்போது வாகனங்கள் கொழுத்தப்பட்டது இவரது வீட்டிற்கு அருகிலும் ஒரு வாகனம் கொழுத்தபடவே புலிக்கெதிரான சிந்து எங்கு பாடலாம் என திரிந்த இவரிற்கு சந்து கிடைத்துகிடைத்து விட்டிருந்தது.உடனே புலிகள் தன்னை கொல்ல சதி என்று சுதிபிசகாமல் பாடிவிட்டிருந்தார்.நான் வசிப்பதும் பிரான்ஸ் நாட்டில்தான் அதுமட்டுமல்ல பிரான்சின் பொது தேர்தல்நடந்து முடிந்து கலவரம் நடந்த இரண்டு நாட்களும் நான் பாரிசின் புற நகர் பகுதியான drancy என்கிற இடத்தில் ஒரு நண்பனின் வீட்டில்தான் நின்றிருந்தேன்.

அப்போது பரவலாகவே வாகனங்கள் கொழுத்தபட்டதால் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த என்னுடைய வானத்தை யாரும் கொழுத்திவிட கூடாது என்கிறகவலை வேறு எனக்கு.

இப்படி பொதுவாக நடந்த ஒரு சம்பவத்தை ரயாகரன் உடனே தனக்கு சாதகமாக்கி புலிகள் மீது பழியை போட்டு காவல்துறையினரிடம் முறையீடும் செய்து அதனை செய்தியாக இவரை பேன்றே புலிக்காச்சல் பிடித்தவர்களினால் நடாத்தப்படும் இணைய தளங்களில் செய்தியாகவும் படங்களுடன் வெளியிட்டிருந்தார் இதுவரை பிரெஞ்சு காவத்துறையினரால் ஒரு புலி ஆதரவாளரும் கைது செய்யப்படவில்லை
85 நாட்கள் புலிகள் தன்னை நிர்வாணமாக்கி தலைகீழாய் கட்டித்தூக்கி அடி அடியென்று அடித்து மலசலம் கூட அப்படியே போன நிலையில் நித்திரை கொள்ள விடாமல் நீரும் உணவுமின்றி இருந்த நிலையில் 86 வது நாள் சிறையை உடைத்து தப்பி வந்ததாக இவர் எழுதும் கதை நன்றாகதான் இருக்கிறது.
ஒரு பத்துநாள் சாப்பாடு போடாமல் அடிச்சாலே ஒருதன் செத்திடுவான். ஆனால் இவரது கதைக்கு ஏற்றால் போல் நல்ததொரு பின்னணி இசையும் குடுத்து ஒரு பாட்டும் போட்டு கடைசியில் ஒரு நூறு புலிகளை தாக்கி சுட்டு தள்ளிவிட்டு சிறை மதிலை தாண்டி அகழியில் நீந்தி தப்பி வந்ததாக படமாக தயாரித்தால் இன்னொரு சில்வெஸ்ரர் ஸ்ராலோனின் ரம்போ படம் பாத்தமாதிரி இருக்கும்.மற்றவர் காதிலே பூவைக்கலாம் மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு பூமாலையை கஸ்ரபட்டு கட்டிதொங்க விடலாம் ஆனால் ஒரு பூந்தோட்டத்தையே எப்படிங்க வைக்க முடியும். இது உங்களிற்கே நியாயமா ராயா சார்???...

படமெடுக்கும் புலிகள்

12:08 PM, Posted by sathiri, 10 Comments

பாம்பு படமெடுக்கும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் புலி படமெடுக்கிது என்று சொல்லியிருப்பவர் வேறு யாருமல்ல விகடன் பத்திரிகைக்காக ஒரு தடாலடி ஸ்டேட்மென்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம். அவரது ஸ்டேட்மெனற்

'விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தமிழ் சினிமாவில் ஏகத்துக்கும் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் மூலம் தமிழ் சினிமாவை இப்போது ஆட்டிப்படைப்பது புலிகள்தான்!'' - வருஷத்துக்கு முன்னாடி மலேசியா, சிங்கப்பூர்லதான் தமிழ் சினிமாவுக்கு வரவேற்பும் ஆதரவும் இருந்துச்சு. இப்போ ஐரோப்பிய நாடுகளிலேயும், கனடா உள்ளிட்ட அமெரிக்க நாடுகளிலேயும் தமிழ் சினிமாவுக்கு செல்வாக்கு பெருகியிருக்கு. காரணம், இலங்கைத் தமிழர்கள் பல பேரு இந்த நாடுகள்ல செல்வச் செழிப்போட இருக்காங்க. இவங்கள்ல சிலரின் முக்கிய வேலையே விடுதலைப்புலிகளுக்காக வேண்டிக் கேட்டோ மிரட்டியோ பணம் வசூலிக்கிறதுதான். அவர்கள் நேரடியாவும், மறைமுகமாகவும் தமிழ் சினிமாவைத் தயாரிப்பது,விநியோகம் பண்றது போன்ற வேலைகளையும் பார்க்கிறாங்க. தமிழ் சினிமா உலகத்துல விடுதலைப்புலி ஆதரவாளர்களோட பணம் கோடி கோடியாப் புரளுது. குறிப்பிட்டுச் சொல்லணும்னா, மூன்றில் ஒரு பங்கு இந்த நபர்களின் பணம்தான்னு தகவல் வந்திருக்குது. அதாவது ஒரு வருஷத்துக்கு நாலாயிரம் கோடி ரூபாய். பணம் போடுறவனுக்கு ஒரு பிரச்னை வந்தா, பலன் அடையுறவங்களெல்லாம் ஆதரவாக் கொடி பிடிச்சு தானே ஆகணும். அதனாலதான் இப்போ தமிழ்சினிமா உலகத்துல இருந்து கொத்துக் கொத்தா விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான குரல் எழுந்திருக்கு. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவுக் குரல் கொடுக்காத ஹீரோக்களோட படங்கள் ஓடும் வெளிநாடு தியேட்டர்கள் துவம்சம் செய்யப்படுது. இதுக்கு பயந்து நடுங்கி நிற்கவேண்டிய சூழல் நம்ம ஊர் ஹீரோக்களுக்கு வந்தது பெரிய பரிதாபம்!''
மேலே பாலசுப்பிரமணியம் காட்டிய படத்தின் கதை வசனம் இயக்கம் காங்கிரஸ்.