Navigation


RSS : Articles / Comments


7:18 AM, Posted by sathiri, No Comment

ஈழபோராட்டத்தில் எனது(பொய்)சாட்சியம் பாகம் 6

படுகொலைகளை கண்டிப்போம் படுகொலைகளை கண்டிப்போம் இது இலங்கை அரசு புலிகள் ஒப்பந்தத்திற்கு வந்ததன் பின்னர் புலத்தில் மாற்று கருத்தாளர் என்றும் மனிதவுரிமைவாதிகள் உஎன்றும் சொல்லிகொண்டு ஒரு குழுவினரின் குரல் கொஞ்சம் சத்தமாகவே ஒலிக்க ஆரம்பித்துள்ளது.இவர்கள் படுகொலைசெய்யபட்ட சிலரின் பெயர்களை வைத்துகொண்டு தங்கள் சுய நலங்களிற்காக புலிகள்தான் இந்த கொலைகளை செய்தார்கள் என்று திருப்ப திருப்ப சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.

அப்படி அவர்களின் பட்டியலில் படுகொலைசெய்யபட்ட ஒருவரான சபாலிங்கத்தை பற்றிய உண்மையான விபரத்தை இதேதொடரில் முதலில் பார்த்தோம். அடுத்ததாக முக்கியமான இன்னொருத்தர் ரயனிதிரணகம. இவரது பெயர் ரயனி அல்ல ராஜினி என்பதே உண்மையான பெயர் ராஜினி எப்படி ரயனியானார் என்று தெரியாது. அது முக்கியம் அல்ல இங்கு இவரின் சகோதரி தான் இன்று இங்கிலாந்தில் மாற்று கருத்தாளர் என்று மனிதவுரிமை பேசிகொண்டிருக்கும் சிலரிற்குள் முக்கியமான நிர்மலா நித்தியானந்தன் ஆவார். இவரை விட ராஜினிக்கு இன்னும் இரு சகோதரிகள் உள்ளனர்.

ராஜினி ஆரம்ப காலங்களில் ஈழவிடுதலையை ஆயுதபோராட்டம் மூலமே பெற்று கொள்ள முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை வைத்திருந்தார் அத்துடன் கூட்டணியினரையும் கடுமையாக விமர்சித்தவர்களில் ஒருவர்.இவர் தனது பல்கலைகழகத்தில் கல்வி பயின்ற காலத்திலேயே திரணகம என்ற சிங்கள இனத்தவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். பின்னர் 85 களில் மேற் படிப்பிற்காக இங்கிலாந்து வந்திருந்த சமயம் இங்கிலாந்தில் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக வேலைத்திட்டங்கள் பலவற்றையும் செய்தவராவார் .இப்படி இங்கிலாந்தில் இருந்த காலகட்டத்தில் ராஜினிக்கும் அவரது விரிவுரையாளர் ஒருவருக்கும் எற்பட்ட காதலினால் திரணகம ராஜினியை பிரிந்துவிட அத்துடன் இருவருக்குமான தொடர்புகள் இல்லாது போய்விட்டது.

தான் ராஜினியை பிரிந்ததற்கான காரணங்கள் ராஜினியின் இயக்க தொடர்புகள் மற்றும் விரிவுரையாளருடனான தொடர்புகளே காரணம் என்று திரணகம பகிரங்கமாகவே பல இடங்களில் கூறியிருக்கிறார் இதில் இரகசியம் ஏதும் இல்லை. பின்னர் 86 களின் ஆரம்பத்தில் இவரது சகோதரி நிர்மலா புலிகளிற்கு ஆதரவாய் தமிழ்நாட்டில் இருந்தபடி புலிகளின் களத்தில் என்கிற பத்திரிகையை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தபோது இவர் புலிகளுடன் முரண்பட்டுகொண்டு வெளியேறியதால்(இதன் விபரத்தை இன்னொருமுறை விரிவாய் பார்ப்போம்)ராஜினியும் இங்கிலாந்தில்புலிகளிற்கு ஆதரவான வேலைகளை நிறுத்தி கொண்டார்.

பின்னர் இலங்கை திரும்பிய இவரிற்கு யாழ்பல்கலை கழகத்தில் மருத்துவபீட விரிவுரையாளர் பணி கிடைத்தது. அப்போதுதான் ஈழ விடுதலை போராட்டததின் இன்னொரு அத்தியாயத்தின் திறப்பிற்கு வழி கோலிய இலங்கை இந்திய ஒப்பந்தம் நடந்து இந்திய இராணுவத்தின் வருகையும் அதை தொடர்ந்து இந்திய இராணுவத்திற்கும் புலிகளிற்குமான மோதல் வெடித்திருந்த கால கட்டம். இந்திய இராணுவத்தின் கண்மூடித்தனமான பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் வெறியாட்டங்களும் நடந்துகொண்டிருந்த வேளை எல்லாவற்றிற்கும் மேலான மோசமான யுத்தகால சர்வதேச விதிகள் அத்னையையும் மீறிய யாழ்வைத்தியசாலை படுகொலையை 21ம் திகதி ஒக்ரோபர் மாதம் 1987ம் ஆண்டு இந்திய இராணுவம் மேற்கொண்டது.

இந்த காலகட்டங்களில்தான் ராஜினியும் சகமருத்துவபீட விரிவுரையாளரான சண்டிலிப்பாயை சேர்ந்த கோபாலசிங்கம் சிறீதரன் என்பரால் மேலும் அங்கு கணணித்துறையில் இருந்த ராயன்கூல்மற்றும் கலைப்பீட ராஜமோகன்ஆகியொரை இணைத்து யாழ்பல்கலைகழகமட்டத்தில் ஒரு மனிதவுரிமை அமைப்பை தோற்றுவித்து இந்திய இராணுவ மற்றும் இந்தியபடைகளுடன் சேர்ந்தியங்கி ஒட்டுக்குளுக்கள் முக்கியமாக ஈ.பி.ஆர்.எல். எவ் பின் மனிதவுரிமை மீறல்களையும் அவர்களின் பொதுமக்கள் மீதான படுகொலைகளையும் ஆதாரங்களுடன் தொகுத்து முறிந்தபனை என்னும் ஒரு புத்தகத்தை வெளியிட்டனர். இந்த புத்தகத்தை எழுதியதில் அதாவது யாழ்வைத்தியசாலை படுகொலைபற்றிய விபரங்களை ராஜினியே எழுதினார்.

இதனால் சர்வதேசத்திற்கு இந்திய இராணுவத்தின் கோரமான பக்ககங்களை காட்டிநின்றது உண்மையே.இதனால் இந்திய இராணுவ அதிகாரிகள் இந்திய உளவுபிரிவு மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.அமைப்பினரிற்கும் இந்த யாழ் மனிதவுரிமை அமைப்பிறகும் ஒரு பனியுத்தம் தொடங்கிவிட்டிருந்தது. அனால் ராஜினியும் சிறீதரனும் தொடர்ந்தும் ஈ.பி. ஆர்.எல்.எவ் வின் தேசிய விடுதலை இராணுவத்திற்கான கட்டாயஆள்சேர்ப்புபற்றிய விபரங்களையும் வெளி கொணரும் நோக்குடன் அவற்றை ஆதாரங்களுடன் சேகரித்து ஆவணங்களாக்க தொடங்கியபோது பனியுத்தம் நடாத்தியவர்களிற்கு குளிர் காச்சல் அடிக்க தொடங்கியது.

இதற்கு மேலும் இந்த யாழ்பல்கலைகழக மனிதவுரிமை அமைப்பை எழுதவிட்டு அழகு பார்க்கமுடியாது என்று தீர்மானித்து இந்திய இராணுவ அதிகாரிகளும் ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் முதலமைச்சராக இருந்த வரதராஜபெருமாளும் ஒரு தீர்மானத்திற்கு வந்தனர்.இந்த அமைப்பின் தலையை வெட்டிவிட்டால் பிறகு வால்ஆடாது தலை யார்? பூவா தலையா போட்டு பார்த்தனர். அந்த அமைப்பின் தலையாய் இருந்தவர் சிறிதரன் ஆனால் பூவா தலையா போட்டு பார்த்தவர்களிற்கு இரண்டு பக்கமும் தலை விழுந்தது. ஆம் இரண்டு தலைகள் மற்றது ராஜினி காரணம் சிறீதரனைவிட ராஜினிக்கு வேறுமனிதவுரிமை அமைப்புக்களுடனான தொடர்புகள் அதிகம் அதைவிட தனிப்பட்டரீதியிலும் வெளிநாட்டு தொடர்புகளும் இருந்தன.ஆகவே சிறீதரனை போட்டால் ராஜினி வெளிநாடொன்றிற்கு தப்பிசென்றுவிட்டால் நிலைமை இன்னமும் இடியப்பம் (சிக்கல்)ஆகிவிடும் எனவே இரண்டு தலைகளுமே போடபடவேண்டிய தலைகள் தான் எனவே அந்தவேலையை முடிப்பதற்கு அப்போது ஈ.பி.ஆர் எல் எவ் பின் இராணுவ பிரிவு பொறுப்பாய் இருந்த றொபேட்(சுபத்திரன் சாவகச்சேரியை சேர்ந்தவர் இவர் பின்னர் சினைப்பர் தாக்குதலில் கொல்லபட்டுவிட்டார்)என்பவரிடம் ஒப்படைக்கபட்டு முதல் போடவேண்டிய தலை யார் எனபதனையும் அடையாளம் சொல்லிவழியனுப்பி வைத்தனர். இரண்டு தலையில் முதல் தலை?? அடுத்தஇதழில் பார்ப்போம்................


http://www.orupaper.com/issue55/pages_K__32.pdf

12:33 AM, Posted by sathiri, 3 Comments

ஈழபோராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம் பாகம் 5

புலோலி வங்கி கொள்ளை 1976ம் ஆண்டுவைகாசி மாதம் நிகழ்த்தபட்டது இந்த வங்கி இலங்கை மக்கள் வங்கியின் ஒரு கிராமிய கிளையாகும். இது தமிழ் இளைஞர் பேரவை செயலிழந்த பின்னர் தமிழீழ விடுதலை இயக்கம் என்று தொடங்கியவர்களாலேயே நிகழத்தபட்டதாகும். இஇந்த கொள்ளையை நடத்தியவர்களின் நோக்கம் அந்த கால கட்டத்தில் சிறீ லங்கா காவல் துறை மற்றும் புலனாய்வு தறையினரால் தேடபட்டும் மற்றும் சந்தேக வளையத்திழல் இருந்த இளுஞர்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம் மாறியும் தலை மறைவு வாழ்க்கையும் மேற்கொண்டிருந்த படியால் அவர்களது அன்றாட செலவுகளையும் மற்றும் ஆயுத பொராட்டம் நடத்த ஆயுதங்கள் வெடி மருந்துகள் வாங்கவும் இந்த கொள்ளையை திட்டமிட்டனர் ஆனால் கொள்ளை நடந்ததின் பின்னர் நடந்த சம்பவங்களோ வேறானவை.

இந்த கொள்ளை சம்பவம் நடந்த நேரம் துரையப்பா கொலை வழக்கில் சந்தேகத்தின் பெயரில் புஸ்பராசா வெலிக்கடை சிறையில் இருந்தார். ஆனால் இந்த கொள்ளையை கென்ஸ் மோகன் சந்திர மேகன் தங்கமகேந்திரன் கோவைநந்தன் போனறவர்களால் நிகழ்த்தப்பட்டது. இந்த கொள்ளைக்கான திட்டத்தை தீட்டி அதை பொறுப்பெடுத்து நிறைவேற்றியவர்களிலுள் முக்கியமானவர்கள் தங்க மகேந்திரனும் சந்திர மோகனுமே.இதில் தங்க மகேந்திரன் திருகோணமலையை சேர்ந்தவர் இவர் யாழ்ப்பாணத்திலேயே தனது நண்பர்கள் வீடுகளில் அந்த நேரம் வசித்து வந்தார் இந்த கொள்ளை சம்பவத்தை திட்டமிட்ட காலங்களில் புஸ்பராசா குடும்பத்தினருடன் நல்ல உறவை கொண்டிருந்த காரணத்தால் அவர் புஸ்பராசா வீட்டிலேயே அந்த காலகட்டங்களில் வசித்தார்.

இவர்கள் திட்டமிட்டபடி கொள்ளை சம்பவம் மிகவும் கன கச்சிதமாக நிறைவேற்றபட்டது .வங்கியிலிருந்து சுமார் ஆறுலட்சம் பெறுமதியான நகைகளும் இரண்டு இலட்சம் பெறுமதியான பணமும் கொள்ளையிட பட்டதாக செய்திகள் வெளிவந்தன . அதேநேரம் அந்த வங்கியின் முகாமையாளராக பாலகுமார் அவர்களே இருந்தார். (ஈரோஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பிற்கு பின்னாளில் பொறுப்பாயிருந்தவர் இப்பொழுது புலிகள் அமைப்புடன் இணைந்து செயல் படுகிறார்) இந்த கொள்ளையில் பால குமாரிற்கும் தொடர்புகள் இருப்பதாக சந்தேகத்தின் பெயரில் கைதாகி பின்னர் விடுதலையானார். 76ம் ஆண்டு எட்டு இலட்சம் என்பது மிக பெரிய தொகையாகும்.

ஆனால் அந்த கொள்ளையைதிட்டமிட்டு கச்சிதமாக செய்து முடித்தவர்களிற்கு கொள்ளையிட்ட பணம் நகைகளை எங்கே கொண்டு போய் பாதுகாப்பாய் பதுக்குவது அந்த பெருந்தொகையான நகைகளை எப்படி விற்று பணமாக மாற்றுவது அதற்கடுத்த படியாக என்ன செய்வது என்கிற திட்டம் எதுவும் இருக்கவில்லை. அதே நேரம் கொள்ளை நடந்து முடிந்ததும் எப்படியும் காவல் துறையும் புலனாய்வு பிரிவினரும் ஏற்கனவே சந்தேக வளையத்தில் இருக்கும் இளைஞர்களை வளைத்து பிடிப்பார்கள் என்கிற காரணத்தால் எல்லோரும் தங்கள் தற்போதைய செலவிற்கு மட்டும் கொஞ்சம் பணத்தை எடுத்து கொண்டு மிகுதி பணம் நகைகளை எங்காவது சில காலம் மறைத்து வைத்து விட்டு சிறிது காலம் தலைமறைவாய் இருந்து விட்டு கொஞ்சம் காவல் துறையின் கெடுபிடி குறைந்ததும் அடுத்ததை யோசிக்கலாம் என்று நினைத்துதங்க மகேந்திரனின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு தனித்தனியாக பிரிந்து சென்று விட தங்க மகேந்திரனும் தனக்கு நம்பிக்கையான புஸ்பராசா வீட்டில் அந்த பணம் நகைகளை கொண்டு மறைத்து விட்டு அவரும் தலைமறைவாகி விட்டார்.

மறு நாள் இலங்கையின் எல்லா பத்திரிகைகளிலும் பரபரப்பு செய்தியாக வங்கி கொள்ளை செய்திதான் முதல் இடத்தில் இடம்பிடித்தது. வழைமை போல காவல்துறையும் புலனாய்வு துறையும் தங்கள் நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர்.அந்த காலகட்டத்தில்புலனாய்வு பிரிவிலும் காவல் தறையிலும் தமிழர்கள் அதிகமாக இருந்த கால கட்டம் . எனவே இந்த வங்கி கொள்ளையை பிடிப்பதற்கான அதிகாரியாய் இங்ஸ்பெக்ரர் பத்மநாதன் தலைமையில் ஒரு குழு அமைக்கபட்டு யாழில் பிரபலமான நகைகடைகள் மற்றும் அடைவுகடைகள் என்பன யாராவது நகைகள் விற்கிறார்களா? என்று கண்காணித்தும் சந்தேகத்தின் பெயரில் பலர்கைது செய்து விசாரிக்கபட்டுகொண்டும் இருந்தனர்.

ஆனால் அவர்களிற்கு சரியான ஆதாரம் எதவும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்களதுசந்தேகமும் விசாரணைகளும் அன்றை காலகட்டத்தில் அரசிற்கு எதிராய் இருந்தஇளைஞர்கள் மீதே இருந்ததாலும் பாலகுமாரிடமும் காவல் துறையின் தீவிர விசாரணைகள் தடந்ததாலும். தங்கள் மீது காவல் துறையின் சந்தேகம் விழுந்து விட்டதை உணர்ந்த தங்க மகேந்திரன் தாங்கள் எந்த நேரமும் கைது செய்யபடாலாம் என்று நினைத்ததால் புஸ்பராசா வீட்டிலிருந்த நகைகளை பாதுகாப்பாக வேறிடம் மாற்ற திட்டம் தீட்டினார் ஆனால் அந்த கொள்ளையை நடத்தியவர்களிற்கு அந்த நேரம் இந்தியாவுடனான தொடர்புகள் ஏதும் இருக்காத காரணத்தால் அவர்களிற்கு இந்தியாவிற்கு தப்பிசெல்லும் யோசனை தோன்றவில்லை எனவே மற்றைய மாவட்டங்களில் அவ்வளவு நகைகளை கொண்டு சென்று விற்க முடியாது பிடிபட்டு விடவார்கள்.

எனவே கொழும்பில் அவர்களிற்கு உறவினர்கள் நண்பர்கள் இருந்ததால் கொழும்பிற்கு கொண்டு போவது என்று முடிவு செய்யபட்டு புஸ்பராசாவின் சகோதரி புஸ்பராணி மூலமாக மூண்று நான்கு தடைவைகளாக சூட்கேசுகளில் துணிகளில் மறைத்து கொழும்பிற்கு இரயில் மூலம் நகைகள் கொண்டு செல்லபட்டது. அங்கு முன்னர் தமிழ் மாணவர் பேரவையிலும் பின்னர் இளைஞர் பேரவையிலும் இருந்த தவராசாவின்(இவர்தான் இன்று ஈ.பி.டி.பி.அமைப்பின் முக்கிய உறுப்பினர் தவராசா)உதவியுடன் களவு பொருளை பொலிஸ்காரன் வீட்டிலேயே ஒளித்து வைத்தால் காவல்துறைக்கு சந்தேகம் வராது என்று சித்தாந்தத்தின் அடிப்டையில் மருதானையில் இருந்த தவராசாவின் காவல் தறையில் இருந்த ஒரு உறவினர் விட்டில் நகைகள் பதுக்கபட்டன.

ஆனால் வேகமாய் புலளாய்வில் இருந்த பத்மநாதன் குழுவினரோ ஒரளவு கொள்ளையரை நெருங்கிவிட்டிருந்தனர். அவர்கள் பரந்தன் இரசாயன் தெரழிற்சாலையில் பொறியியலாளராய் இருந்த தவராசாவின் மூத்த சகோதரன் தங்கராசாவை கைது செய்து விசாரணைக்காய் கொண்டு சென்றதும் அடுத்ததாய் தானும் எந்த நேரமும் கைது செய்ய படலாம் என்று பதறிப்போன தவராசா காவல்துறையிடம் ஓடொடி சென்று தனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை தனக்கு நகைகள் இருக்கிற இடம் தெரியும் காட்டித்தரலாம் ஆனால் அதற்கு மாற்றீடாக சகோதரனை விடுதலை செய்வதோடு தன்னையும் கைது செய்ய வேண்டாம் எனகேட்டு கொண்டு நகைகள் இருந்த இடத்தையும் யாரால் எப்படி எங்கிருந்து கொண்டுவரப்பட்டது

என்றும் விலாவாரியாக சொல்லி காட்டிகொடுத்து விட்டார். நாகரீகமாக சொல்வதானால் அரசுதரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.பிறகென்ன ஆத்திலை போட்டு குளத்திலை எடுத்தது மாதிரி அடுத்தநாள் பத்திரிகைகளில் புலோலியில் காணாமல் போன நகைகள் மருதானையில் மீட்கப்பட்டது என்று தலைப்பு செய்திகளில் வெளிவந்தது.அதுமட்டுமல்ல அந்த கொள்ளையில் சம்பந்த பட்ட அனைவரும் பாலகுமாரும் கைதாகி சிறைகளில் அடைக்கபட்டனர்.ஆனாலும் கொள்ளை போன நகைகளில் அரைவாசியே நகைகளே மீட்கப்பட்டது. கொழும்பிற்கு கொண்டுவரும்போது புஸ்பராசாவீட்டிலே கொஞ்சம் காணாமல் போனதாகவும் பின்னர் தவராசாவின் பொறுப்பில் இருந்தசமயம் கொஞ்சம் காணாமல் போனதாகவும் கொள்ளையில் சம்பந்நத பட்டவர்கள்பின்னர் குற்றம் சாட்டினர் .

ஆனால் அதற்கும் தங்களிற்கும் சம்பந்தமில்லை காவல்துறை அதிகாரிகளே பாதியை அள்ளிவிட்டு மீதியை நீதிமனறத்தில் ஒப்படைத்தனர் என்று புஸ்பராசா குடும்பத்தினரும் தவராசாவும் தங்கள் மீதான குற்றசாட்டை மறுத்தனர்.ஆனால் இங்கு யார் எவ்வளவு எடுத்தனர் என்று ஆராய்வது இந்த கட்டுரையின் நோக்கம் இல்லையென்பதால் அடுத்த தொடரில் புஸ்பராசா தனது புத்தகத்திலும் மற்றும் புலத்திலும் மாற்று கருத்தாளர்கள் என்று தங்களை இனங்காட்டுபவர்களும் இன்னொரு முக்கிய கொலைசம்பவத்தையும் திருப்ப திருப்ப புலியின் வாலில் கட்டிவிட துடிக்கின்றனர் அது யாழ்பல்கலை கழக விரிவுரையாளர் ரயனி திரணகம. எனவே அடுத்த பாகத்தில் ரயனியையும் திரணகமவையும் பார்ப்போம்....................._________________விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்